புதன், 8 ஜனவரி, 2020

#சாவுங்கடா_பதிவுகள் (எனது முதல் ஈ.புக்-கை முன்வைத்து)


"10 செகண்ட் கதைகள்" வந்த காலத்தில் விகடனுக்கு 500 க்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பியதாகவும், ஆனால் அந்த கலெக்ஷனைத் தொலைத்து விட்டதாகவும், 250 ஐ மட்டும் மீட்டெடுக்க முடிந்ததென்றும் பதிவிட்டிருந்தேன். தொடர்ந்து ஆப்பிஸ், ஆப்பிஸ், வேலை, வேலை, பயணம், பயணம், என மண்டைக்காய்ச்சலாக இருந்ததால் மூளை சில சிம்பிள் விஷயங்களைக் கூட மறந்து விட்டிருந்தது.

இன்னிக்கு சுத்திமுத்தி கொஞ்சம் இளமை, புதுமையா இருந்ததாலயும் (புரூக்ஃபீல்டு மாலில் இருந்தேன்), மால் மோட்டு வளையைப் பார்த்து விடாம வெறிச்சி யோசிச்சதாலயும் திடீர்னு ஒரு மேட்டர் தோணுச்சு. நீ அனுப்பிய கதை எல்லாமே மெயில்ல தானே? அப்போ எல்லாமே sent items ல இருக்குமே பக்கின்னு நானும், என் மூளையும் பேசிக்கிட்டோம். அப்டின்னா? அப்டின்னா? அடாடாடா.. ஒரு நாள் உக்காந்தோம்னா sent items ல இருந்து எல்லாக் கதைகளையும் உருவி எடுத்துடலாமே.

போச்சா? "8 செகண்ட் கதைகள்" பார்ட் 2 மட்டும் தான் ப்ளான் பண்ணிருந்தேன். இப்போ பார்ட்டுகள் 3, 4, 5 வரப்போறத உங்க யாராலயும் தடுக்க முடியாது. வெயிட்டுங்கள். வருகிறேன். ஜெய் "சிவகாமி தேவி".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக