புதன், 8 ஜனவரி, 2020

பொன்னியின் செல்வன் (Just fun, no harm)

3 ஜனவரி 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

இன்டஸ்ட்ரியில் இன்றைய ஹாட் டாபிக் "பொன்னியின் செல்வன்". மொத்தப் படத்தோட வசனத்தையும் பஸ் டிக்கெட் பின்பக்கத்திலேயே எழுதக்கூடிய மணி சார், ஏகப்பட்ட வசனங்கள் கொண்ட ஒரு சரித்திரப்படத்தை எப்படி எடுக்கப்போகிறார் என்று ஒரே பரபரப்பு. "பாகுபலி" மாதிரி இருக்குமா? இல்ல "அதுக்கும் மேல" யா? என்று இன்டஸ்ட்ரியே கலகலத்துப் போயிருக்க.......
அங்கே மணி சார் ஆபீஸில் டிஸ்கஷன் ஆரம்பிக்கிறது.

"நம்ம ஹீரோ பேரு "அருள்"
சார், அது "அருள்மொழிவர்மன்".
"அருள்" போதும்.


அஸிஸ்டெண்டுகள் ஷாக்காகி "ஓக்கே சார், அப்போ "ஆழ்வார்க்கடியான் நம்பி"?
"நம்பி" போதும்.
"சார், கேரிங்கா இருக்கு. அப்போ மத்த கேரக்டர்கள் பேரு?"
"வந்தி" (வந்தியத்தேவன் (எ) வல்லவரையன் என்று குன்ஸாகப் புரிந்து கொள்கிறார்கள்),
"குந்தி"
"சார், அது மகாபாரதத்துல வர்ற அம்மா, இது குந்தவைப்பிராட்டி. இளைய பிராட்டி"
"அப்போ சின்னம்மா"ன்னு வச்சிக்குவோம்"
"அப்டின்னா வானவன் மாதேவிக்கு "பெரியம்மாவா" சார்?"
"ஷ்ஷூ குறுக்கப்பேசாத. பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையருக்கு பெரியவர், சின்னவர் னு வச்சிக்கலாம். பேக்ரவுண்ட்ல டான் மியூசிக் குடுத்தா காட்ஃபாதர் எஃபெக்ட் வரும்"
"சார், என்ன சார் கதையையே மாத்துறீங்க?"
"சும்மாருப்பா, சுகாசினி சொன்னாங்க தப்பில்லன்னு. ராமாயணத்தை ராவணாயாணமா எடுக்கலையா?"
"அவுங்க சொன்னா, ஸாரி நீங்க சொன்னா சரி சார், அப்போ ஆதித்த கரிகாலன்?"
"கரி"ன்னு வச்சுக்குவோம்".
"நெனச்சேன் சார்"

இப்படியே டிஸ்கஷன் தொடர, கேமரா அவுட் ஆஃப் போகஸில் பின்னால் நகர்கிறது. ஃபேட் அவுட்டில் மணி சாரும், அஸிஸ்டெண்டுகளும் தூரத்தில் தெரிய கதவருகில் தன் 25 தலையணைகளையும் வைத்தபடி (அதாங்க "வெண்முரசு" செம்பதிப்பு வரிசை) "இந்தப்படத்துக்கு நான் எதுக்கு? என்னை விட்ருந்தா இன்னோரு தலகாணி தச்சிருப்பேனே" என்று யோசித்தபடியே வெறித்துக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.

பின்னணியில் "ஜஜாங், ஜஜாங்" என்று கிடார் இசை ஒலிக்கிறது "இசை" ஏ.ஆர்.ரஹ்மான் என்ற எழுத்துக்களுடன்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக