புதன், 8 ஜனவரி, 2020

விஜயகாந்த் - தின் "த்தூ".......

28.டிசம்பர்.2015 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

விஜயகாந்த்தின் "த்தூ" இஷ்யூ நினைவிருக்கிறதா?
-----------------------------------------------------------------------------------

டிஸ்கி 1 - நான் விஜயகாந்த் ஐ சப்போர்ட் செய்யவில்லை. அந்த வீடியோவைக் கூட நான் பார்க்கவில்லை. இளையராஜா மேட்டருக்கும் தான்.
.
டிஸ்கி 2 - நல்ல பத்திரிகையாளர்கள் நிறைய பேர் உண்டு. அவர்கள் என் பதிவுக்குக் கோபிக்க வேண்டாம்.
.
வேறு வேறு ஊர்களில் நடக்கும் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் விஷயங்களுக்காக பல முறை பிரஸ் மக்களை அழைக்க வேண்டி இருக்கும். பலர் பயங்கர மரியாதை எதிர்பார்ப்பார்கள், சரி அது கூடத் தவறில்லை.
.
மற்றவர்களின் உண்மை முகம் வேறு. 95 சதம் பேர் கவர் வாங்குபவர்கள் தான். 2 சதம் பேர் மேல தெரிஞ்சிடும் சார் என்று பயந்து வாங்காதவர்கள் மூன்றே சதம் பேர்கள் தான் கவர் வேண்டாம் என்று நேர்மையாக மறுப்பவர்கள்.
.
அந்த 95 சதத்தில், கவர்ல பணம் கம்மியா வச்சிருக்கீங்க என்பவர்கள், (யார் யாருக்குத் தர வேண்டும் என்று) குறிப்பு எழுதாமல் கவர் கொடுப்பது தெரிந்தால் எச்சைத் தனமாக, சுற்றி வந்து "நான் இன்னும் வாங்கலை" என்று முகத்தைத் திருப்பியபடி இரண்டாவது கவர் வாங்குபவர்கள், மீட் டுக்கே வராமல் போன் செய்து, கவரை நம்ம நண்பர் கிட்ட குடுத்தனுப்புங்க என்று வழிபவர்கள், பிரஸ் மீட்டுக்கு கார் அனுப்பினாத் தான் வருவேன் என்பவர்கள் (70 கிமீ அப் அண்ட் டவுன் டாக்ஸி வாடகை எவ்வளவு ஆகும்?), ஒரே பத்திரிகைக்கு "நான் தமிழ் எடிஷன் சார், இங்கிலீஷ் எடிஷன் நண்பருக்கு ஒரு கவர் கொடுங்க" என்று பச்சையாகப் பொய் சொல்லி வாங்கும் பிச்சைக்காரர்களைப் பல முறை பார்த்திருக்கிறேன்.
.
அது போக பல ஆண்டுகளுக்கு முன், நானும் ஒரு பிரஸ்ஸில், மேனேஜ்மெண்ட் டிபார்ட்மெண்டில் இருந்திருக்கிறேன். பல பத்திரிகையைச் சேர்ந்த நிருபர்களைப் பார்த்திருக்கிறேன். அவன் கவர் குடுத்தான்னா சப்ளிமெண்ட் ல ஒரு ஆர்ட்டிகிள் போட்டுடலாம் என்பவர்கள், கவருக்கும், பிரஸ் என்ற வெட்டி மரியாதைக்கும் ஆசைப்பட்டு யானைக்குத் தன் பலம் தெரியாது என்பது போல இன்னமும் ஏழாயிரம் சம்பளத்துக்கு ஏதாவது ஒரு பிரஸ்ஸில் ஒட்டிக் (ஓட்டிக்) கொண்டு இருப்பவர்கள், கவர் தரவில்லை என்பதற்காக நல்ல விஷயங்களை இருட்டடித்தவர்கள், ஜனாதிபதியே ஆனாலும் முஸ்லிம் என்பதற்காக அப்துல் கலாம் பெயரை முதல் பக்கத்தில் போடாதே என்றவர்கள் எனப் பலரையும் பார்த்திருக்கிறேன். "கோ" மற்றும் "தனி ஒருவன்" திரைப்படங்கள் சொல்லும் சேதியைப் போல மக்கள் கவனத்திற்கே வராமல் எத்தனையெத்தனையோ செய்திகளை மறைக்கும் ஊடகவியலாளர்கள் இங்கே அதிகம்.
.
பள்ளி, கல்லூரி காலம் தாண்டி வேலைக்கு வந்தபின், திடீரென ஒருவர் ரோட்டில் நம் கையைப் பிடித்து இழுத்தாலோ, முதுகை மைக்கால் தட்டித் திருப்பினாலோ சாமானியனான நமக்கே கோபம் வரும். வெள்ளப் பணிகளைப் பார்க்க வந்த ஒரு அமைச்சரை இழுக்காத குறையாக கையைப் பிடித்து விட்டு "கையைத் தட்டிவிட்டு ஓடுகிறார் வளர்மதி" என்று மாற்றிச் செய்தி போடுகின்ற, வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு அமைச்சரை முதுகில் மைக்கால் தட்டித் திருப்பி, திடீரென்று "லைவ் ஓடுது, பேசுங்க" என்றும் பதட்டப் படுத்தி சீன் கிரியேட் செய்யும் கோமான்கள் உள்ள இடம் இது.
.
இவர்களுக்கு இது போன்ற அவமானங்கள் அவ்வப்போது தேவை தான்.
.
டிஸ்கி - விஜயகாந்துக்கு எதிரான போராட்டத்தில் அந்த 3 சதம் நியாயவான்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக